Monday, May 22, 2017

ரஜினி – பா.ரஞ்சித் கூட்டணியில் இணையும் `பாகுபலி-2′ பிரபலம்

‘கபாலி’யை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கும் ரஜினியின் 161-வது படத்தின் படப்பிடிப்பு வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது. இதற்கான போட்டாஷுட் சமீபத்தில் நடந்தது.

இது மும்பை தாராவியில் நடப்பது போன்ற கதை. எனவே, தாராவி போலவே சென்னையில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது. ரஜினி ஜோடியாக இந்தி நடிகை ஹீமா குரோஷி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த நிலையில், இந்த படத்தில் ஆஸ்கார் விருது பெற்ற ஹாலிவுட் வி.எப்.எக்ஸ் தொழில் நுட்ப கலைஞர் பெட்டாடிராப்பர் பணியாற்ற இருக்கிறார். இவர் ‘பாகுபலி-2’ படத்தில் வி.எப்.எஸ் தொழில் நுட்ப கலைஞராக பணிபுரிந்தவர். அந்த படத்தில் இடம் பெற்ற பிரமாண்ட கிராபிக்ஸ் காட்சிகளை உருவாக்கியவர்.

எனவே, ரஜினியின் புதிய படத்திலும் பிரமாண்டமான கிராபிக்ஸ் காட்சிகள் இடம் பெற உள்ளது என்று கூறப்படுகிறது. இதனால் ரஜினியின் புதிய படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

0 comments:

Post a Comment