
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் அடைந்தபோது, அதில் சந்தேகம் இருப்பதாகவும், அதுபற்றிய உண்மையை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமருக்கு கவுதமி கடிதம் எழுதினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது கடிதத்துக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் கவுதமி ஒரு பண்பலை வானொலியில் பேட்டி அளிக்க சென்றார். அவரிடம் கேட்கப்பட்ட முதல் கேள்வி, “நீங்கள் ஏன் உலகநாயகன் கமல்ஹாசனை பிரிந்தீர்கள்?” இதை கேட்ட உடனே கவுதமி லேசாக கோபப்படத் தொடங்கினார்.
அடுத்து, “ முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீங்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியது விளம்பரம் தேடத்தானே?” என்று கேட்டது தான் தாமதம், ஆவேசம் அடைந்த கவுதமி கோபம் அடைந்து பாதியிலேயே பேட்டியை முடித்துக்கொண்டு கிளம்பிவிட்டார்.
0 comments:
Post a Comment