
சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடந்த இந்த சந்திப்பின்போது, ரஜினி அரசியல் தொடர்பாக பேசிய பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரஜினி அரசியலுக்கு வருவார் என்றும் கூறப்பட்டது. அவர் அரசியலுக்கு வருவது பற்றி ஆதரவான கருத்துக்களும், எதிரான கருத்துக்களும் கூறப்படுகின்றன. ரஜினிக்கு எதிராக இன்று போராட்டமும் நடந்தது.
இந்த நிலையில் ரஜினி இன்று மீண்டும் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகர்களை சந்திப்பதாக கூறப்பட்டது. இதுகுறித்து விசாரித்த போது ரஜினி அலுவலக ஊழியர்கள் அவர்களுடைய குடும்பத்தினரை ஒரு சில ரசிகர்கள் உள்பட 200 பேருடன் ரஜினி புகைப்படம் எடுத்துக் கொண்டார் என்று தெரிய வந்தது.
இன்று கருப்பு நிற உடை அணிந்து ரஜினி வந்து இருந்தார். ஒவ்வொருவராக அவருடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். ரஜினி மீண்டும் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்கு ராகவேந்திரா திருமண மண்டபத்துக்கு வந்ததால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இன்று பத்திரிகையாளர்கள் யாரையும் மண்டபத்துக்குள் அனுமதிக்கவில்லை.
0 comments:
Post a Comment