
இந்நிலையில் இன்றோடு இந்த படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதையடுத்து விரைவில் படக்குழுவினர் இந்தியா திரும்பவுள்ளனர். அடுத்தக்கட்ட படப்பிடிப்பை ஜுன் மாதத்தில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதில் சமந்தா சம்பந்தப்பட்ட காட்சிகள் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 100-வது படமாக இப்படத்தை தயாரித்து வருகிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் விஜய் 3 கெட்டப்புகளில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
0 comments:
Post a Comment