பிரபாசின் அடுத்த அதிரடி!
04 மே,2017 - 08:03 IST
பாகுபலி, முதல் பாகம் வெளியாகும் வரை, பிரபாஸ், தெலுங்கில் முன்னணி நடிகர் கிடையாது. இரண்டாம் வரிசை நடிகர் தான். ஆனால், அந்த படம்
வெளியான பின், அவரது ஒட்டுமொத்த திரையுலக வாழ்க்கையும் மாறிவிட்டது. ஆந்திர, தெலுங்கானா மட்டுமின்றி, நாடு முழுவதும் அவருக்கு ரசிகர்கள்
உருவாகிவிட்டனர். ஹிந்தி நடிகர்களுக்கு கூட கிடைக்காத அந்தஸ்து, தற்போது அவருக்கு கிடைத்துள்ளது. இதனால், அவரை வைத்து, தமிழ், தெலுங்கு, ஹிந்தி என, மூன்று மொழிகளில் படம் தயாரிக்கும் டிரெண்ட் தற்போது
உருவாகி உள்ளது. அதில் ஒரு படம் தான், சாஹூ. பிரபாஸ் ரசிகர்களுக்கு
தீனி போடும் வகையில், பக்கா ஆக் ஷன் படமாக இது, உருவாகி உள்ளதாம். தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழி திரைப்படங்களின் பல முன்னணி நடிகர்களும் இதில் நடித்துள்ளதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
0 comments:
Post a Comment