நடிகர் கமலஹாசன் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்
04 மே,2017 - 02:38 IST
மதுரை: நடிகர் கமலஹாசன் தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என மதுரை ஐகோரட் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
நடிகர் கமலஹாசன் மகாபாரதம் பற்றிய கூறியது இந்து மதத்தை அவமதிப்பதாக உள்ளது என ஆதிநாதர் சுந்தரம் என்பவர் வள்ளியூர் நீதிமன்றத்தில் நடிகர் கமலஹாசன் மீது வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து வரும் 5-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு நடிகர் கமலஹாசனுக்கு கோர்ட் உத்தரவிட்டது.
இந்நிலையில் நடிகர் கமலஹாசன் மதுரை ஐகோர்ட்டில் மனு ஒன்றறை தாக்கல் செய்துள்ளார். மனுவில் அவர் கூறியிருப்ப தாவது: தன் மீதான வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரியும், வழக்கில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க கோரியும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
0 comments:
Post a Comment