Saturday, December 17, 2016

பைரவரின் கண்ணுக்கு தெரியாத எதிரியே இவர்தான் – அதனால் தான் இப்படியாம்


சூர்யா – ஹரி கூட்டணியில் சிங்கம் படத்தின் மூன்றாம் எஸ்3, தமிழில் சி3 என்ற பெயரில் உருவாகியுள்ளது. சூர்யாவுடன் அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். அதே துரை சிங்கமாக, ஆனால் சர்வதேச குற்றவாளிகளை களையெடுக்கும் அதிகாரியாக சூர்யா நடித்திருக்கிறார். முந்தைய பாகங்களை விட ஆக்ஷ்ன் காட்சிகளும், அனல் பறக்கும் வசனங்களும் சி3யில் கொஞ்சம் தூக்கலாகவே உள்ளது.


சிங்கம்3 படத்தின் படப்பிடிப்புகள் எல்லாம் முடிந்து ரிலீஸ்க்கு தயாராகிவிட்டது. ஏற்கனவே இரண்டு முறை தள்ளிப்போன சிங்கம்3, அடுத்தவாரம் டிச.,23-ம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது அதுவும் தள்ளிபோய் உள்ளது.


சிங்கம் 3 படத்திற்கு சென்சார் போர்ட்டில் ஏற்பட்டுள்ள சிக்கல், அதிககட்டணம் வசூல் போன்ற காரணங்களால் இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிபோய் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் சிங்கம் 3 ஏன் தள்ளிப்போனது என்று சூர்யா தன் டுவிட்டரில் கூறியிருக்கிறார்.


அதில், ‛‛சில தவிர்க்க முடியாத காரணங்களால் எஸ்3 படத்தின் ரிலீஸ் தள்ளிபோய் உள்ளது. இதுவும் நன்மைக்காக என்று நம்பவும், உங்களின் ஆதரவு எப்போதும் தேவை” என்று கூறியுள்ளார்.


ஆனால், பைரவரின் கண்ணுக்கு தெரியாத எதிரியே இவர்தான் என்றும் பொங்கல் அன்று படத்தை வெளியிடத்தான் திடீரென ரிலீஸை தள்ளி வைத்துள்ளனர் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.






More


















0 comments:

Post a Comment