
இந்நிலையில், முத்தையா தனது நான்காவது படமாக மீண்டும் சசிகுமாரை வைத்து இயக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ‘கொடி வீரன்’ என்ற தலைப்பு வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பை வருகிற மார்ச் 25-ந் தேதி சிவகங்கையில் தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என தெரிகிறது.
‘மருது’ படத்திற்கு பிறகு முத்தையா, சூர்யாவை வைத்து அண்ணன்-தங்கை பாசத்தை மையமாக கொண்டு ஒரு படத்தை இயக்கப்போவதாக செய்திகள் வெளிவந்தது. அப்படத்தில் கதாநாயகியாக ரித்திகா சிங், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கவிருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால், சில காரணங்களால் அப்படம் தொடங்காமலேயே போய்விட்டதாக கோலிவுட் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment