Tuesday, November 22, 2016

தொடர்ந்து என்னை கிண்டல் செய்வதா? லட்சுமி ராமகிருஷ்ணன் கோபம்


தொடர்ந்து என்னை கிண்டல் செய்வதா? லட்சுமி ராமகிருஷ்ணன் கோபம்



22 நவ,2016 - 12:01 IST






எழுத்தின் அளவு:








சமீபத்தில் வெளியான கடவுள் இருக்கான் குமாரு படத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை பேசுவதெல்லாம் உண்மை என்ற பெயரில் கலாய்த்திருந்தார்கள். லட்சுமி ராமகிருஷ்ணனாக ஊர்வசி நடித்திருந்தார். நிகழ்ச்சியை கிண்டல் செய்திருப்பதோடு அதில் இருக்கும் வணிக சமாச்சாரங்களையும் போட்டு உடைத்திருந்தார்கள்.

இதுபற்றி லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியிருப்பதாவது: தொடர்ந்து என்னையும், எனது நிகழ்ச்சியையும் பற்றி கிண்டல் செய்து வருகிறார்கள். அதுபற்றி நான் கவலைப்படவில்லை. சொல்வதெல்லாம் உண்மை ஆயிரம் எபிசோட்களை தாண்டியிருக்கிறது. பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டிருக்கிறது. நிகழ்ச்சிக்கு தொடர்ந்து ஆதரவு தரும் ரசிகர்கள் என்ன முட்டாள்களா? நிகழ்ச்சியை நடத்தும் நான் முட்டாளா?. சொல்வதெல்லாம் உண்மைக்கு வந்த ஒரு சம்பவத்தைதான் அம்மணி படமாக எடுத்தேன். தரமான படம் என்று எல்லோரும் பாராட்டினார்கள். சினிமாவில் என்னை கிண்டல் செய்கிறவர்கள். என்னைபோல தரமான படத்தை தர முயற்சிக்கலாம். இவ்வாறு லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியிருக்கிறார்.


0 comments:

Post a Comment